சினிமாவால் நாம் லாபம் சம்பாதிப்பது எப்படி...? பகுதி -2
பொதுவாகவே மில்லியனராக வேண்டும் என்றால் தினமும் இவ்வளவு சேமி; அது இத்தனை வருடத்தில் இவ்வளவு பணம் வரும் என்று சாம்பிரதாயமாக சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
ஆனால் நான் இங்கு சொல்லப்போவது உங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கலாம். நம்ப முடியாததாக இருக்கலாம்... ஆனால் இது உண்மையும் கூட....என் நடைமுறை வாழ்வில் கண்ட உண்மையும் கூட
மில்லியனராக வேண்டுமானால் சேமிப்பதை விட செலவு செய்... வேகமாக மில்லியனராகிவிடலாம்...
இதென்ன பைத்தியக்காரத்தனம்...? என நீங்கள் கேள்வி கேட்பது என் செவிகளில் எதிரொலிக்கின்றது.
இது உண்மையே... பணம் வேண்டுமானால் நிறைய செலவு செய்.
ஆனால்-
நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு காசும் பன்மடங்காகப் பெருகுவதற்கான செயல்களில் செலவு செய்யுங்கள்.
ஜீடி நாயுடு தன் மகன் கோபாலிடம் ஒரு கணிசமான பெருந்தொகை கொடுத்து, "இந்தப் பணத்தை பெருக்குக் காட்டு..." எனக் கூறிவிட்டு அயல்நாட்டுப் பயணம் மேற்கொண்டார். பயணம் முடிந்து திரும்பி வந்த பொழுது மகனை அழைத்து, " பணத்தைப் பெருக்க என்னென்ன திட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டாய்...?." எனக் கேட்டார்.
மகனோ ஒரு பெருந்தொகையை அலுவலகத்தை அழகு படுத்தப் பயன்படுத்தியிருந்தார். ஜீடி நாயுடு சினமுற்றார். "இப்படி பணத்தை இப்படி முடக்காதே..." என எச்சரித்தார்.
இப்படிப்பட்ட செலவினங்கள் முதலீடாகாது.
சேமிப்பதை விட செலவு செய்....விரைவில் பணம் சேரும்...
இது எப்படி....?
சேமிக்கும் எண்ணம் ஏற்படும்பொழுது அங்கே தற்காப்பு மட்டுமே இருக்கின்றது. பாதுகாப்பிற்கான பயத்தில் மனம் முடக்கப்படுகின்றது. சேமிக்கும் பணத்தினால் வரும் வளர்ச்சி மெது மெதுவாக வரக்கூடிய ஒன்று.
ஒரு வீட்டில் ஒரு நபர் ரூ 10,000 ஒரு மாதத்திற்கு சம்பாதிப்பதற்கும், வீட்டிலுள்ள ஐந்து பேர் ஆளுக்கொரு ரூ5,000 சம்பாதிப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்.....?
பணம் இப்படிப் பன்முகப் பெருக்கமாய் சட்டத்திற்குட்பட்டு நியாயமாய் இருக்கவேண்டும்.
நாம் இங்கே சொல்லப்போவது நாம் சினிமா பார்ப்பதனால் நாம் எப்படி பணம் குவிக்க இயலும் என்பதே....
அது எப்படி....?
அடுத்தத் தொடர் வரும் வரை செலவு செய்யுங்கள். நிறைய செலவு செய்யுங்கள்....
செலவு செய்யும் பொழுது மறக்க வேண்டாம்
உங்களது ஒவ்வொரு காசும் பன்மடங்காகப்பெருகும் செயல்களில் செலவு செய்யுங்கள்...
தொடரும்.....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment